Monday, May 30, 2016

வரலாற்று பதிவுகள்


                         வரலாறுகளை என்னுடைய blogspotல்
காண்க:--
sembiyanmazhavarayar.blogspot.com
www.mazhavarayarpages.blogspot.com

                                        அன்புடன்,
                                     ஊத்துக்காடு
   இராம.சம்பந்தமூர்த்தி மழவராயர்  

Saturday, May 28, 2016

குமரிக் கண்டம்

கன்னியாகுமரி
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர
தொடங்கியுள்ளது .(((இதை படிக்க
5து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம்
வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த
முறை உங்களை 20,000
வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய
ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவ
ிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க
உங்களின் பொன்னான 5
நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான்
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக
வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்க
ள், இங்கு தான் நம் மூதாதையர்
வாழ்ந்தனர்.இங்கு தான் நாம்
இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ்
பிறந்தது.இங்கு தான் இன்னும் பல
வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான்"நாவலன்
தீவு"என்று அழைக்கப்பட்ட"கு
மரிக்கண்டம். கடலுக்கடியில்
இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்ட
ிருக்கும் இது,ஒரு காலத்தில்
பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த
ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க,
இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு,
சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த
ஒரு பிரம்மாண்டமான இடம்
தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க
நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை
நாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற
நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்ப
னை நாடு என
இங்கு நாற்பது ஒன்பது நாடுகள்
இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற
இரண்டு ஆறுகள்
ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,
மணிமலை என இரண்டு மலைகள்
இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடப
ுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான
மூன்று நகரங்கள் இருந்தன.உலகின்
தொன்மையான நாகரீகம்
என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம்
வெறும் நான்காயிரம் வருடங்கள்
முந்தையது தான். நக்கீரர்"இறையனார்
அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச்
சங்கங்கள் 9990 வருடங்கள்
தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில்
உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல்
4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர்,
அகஸ்தியருடன் 39மன்னர்களும்
இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகு
ருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .இதில்
அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம்
தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில்
கி.மு 3700இல் 3700புலவர்கள்கள
ுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,ப
ூதபுராணம்,மாபுராணம்"ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம்
மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.ம
ூன்றாம் தமிழ்ச் சங்கம்
இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449
புலவர்கள்களுடன்"அகநானூறு,
புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகி
ய நூல்கள் இயற்றப்பட்டது.இ
வ்வளவு பழமையான தமிழனின்
வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய
இந்திய அரசு எந்த அக்கறையும்
காட்டாமல் இருப்பது வேதனையான
விஷயம் !!!!..இந்திய
அரசு வெளிக்கொண்டுவராத நம்
வரலாற்றை நாமே இந்த
உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம்
2000 வருடம் பழமையானவர்கள் என்ற
பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட
உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம்
என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்
று தேடல் தொடரும்.........!!தமிழ்
மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப்
பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம்
வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப்
படித்துவிட்டு நண்பர்களுடன்
உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !நம்
பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்
ஐம்பது பேராவது இதனைப்
பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.


Monday, May 23, 2016

கள்ளன் அச்சப் பிடாரி


பண்டைத் தமிழர்களின் மாத அளவுகள்:

பண்டைத் தமிழர்களின் மாத அளவுகள்:
பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் சூரியனின் 30பாகை பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. ஒவ்வொரு ராசியும் 30 பாகை (12x30 = 360 பாகை). தமிழ் மாதங்களின் கால அளவுகள்.
சித்திரை மாதம் - சூரியன் வான் உச்சியில் வரத் தொடங்கும் மாதம்
உத்திராயனம் :
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, இம்மாதங்களில் சூரியன் வடக்கு நோக்கி வலம் வருவார். இதற்கு மேடவீதி என்றும் பெயர். தேவருக்குரியது.
தக்ஷிணாயனம் :
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, இம்மாதங்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வலம் வருவார். அசுரருக்குரியது.
இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.
4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.
12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்