Friday, June 10, 2016

கி.மு.846--881வரை சோழப் பேர ரசை ஆண்ட
விஜயாலயச் சோழ தேவருக்கும் எம் குடும்ப
முன்னோர் ஊத்துக்காடு மழவரையர் மகளுக்கும் பிறந்த சோழப் பேர ரசரான ஆதித்த சோழ ராஜாவின் தெய்வச் சன்னதியில் உள்ள கற் சிலையாகும்.  நம்
கள்ளர் குல பாட்டனாரான இவர் ஆட்சிக்
காலத்தில்தான், வரலாறு போற்றும் குடந்தைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம்
பெரும் போர் நடைபெற்றது. அப்போரில்
இவர் தந்தை விஜயாலயச் சோழ தேவரின்
ஆணைப்படி ஆதித்த சோழ தேவர் பாண்டியர்
பெரும் படையை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
இவரது அசகாய சூரத் தன்மையை நேரில்
கண்டு வியந்த இராட்டிரக்கூடப் பேர ரசர்
இரண்டாம் கிருட்டிண தேவன் தன் அருமை
மகள் இளங்கோப் பிச்சியை மணமகிழவுடன்
இச்சோழ பெரு வீரனான  ஆதித்த சோழனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.இளங்கோப் பிச்சிக்கும் ஆதித்த
சோழ தேவருக்கும் பிறந்தவரே கன்னர தேவன் என்ற  சோழ அரச குமாரன் ஆவார்.
இக்கன்னர தேவன் மதுரையும் ஈழமும்
கொண்ட கோப்பரகேசரி வர்மர் முதலாம்
பராந்தகச் சோழனுக்கு சகோத ர ர் உறவுமுறை உள ளவர் என்பது குறிப்பிடத்
தக்கதொன்றாகும்.

மேற்கண்ட திருப்புறம்பயம் போர்பற்றி வர
லாற்றுப் பேரறிஞர் அமர ர்  தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் சுவைபட எழுதி
யுள்ளது வருமாறு:--

"..கி.பி.871ல் தன்புதல்வன் முதல் ஆதித்த
சோழனுக்கு (விஜயாலயச் சோழ தேவர்)
இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் நிகழ்ச்சி
களில்  ஈடுபடும்படி செய்தான். அவன் இள
வரசனாயிருந்த காலத்தில. கி.பி.880-ஆம்
ஆண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன்
சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைப்
பல அல்ல ல்களுக்கு உள்ளாக்கினான். அந்
நாட்களில் சோழ நாட்டின் மற்றொரு பகுதி
பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர் மன்
ஆட்சிக்குட்பட்டிருந்த்து. அதனால், அப்பல்ல வன் ஆதித்த சோழனுக்கு உதவிபுரிந்து,  வர
குண பாண்டியனைச் சோழ நாட்டைவிட்டுத்
துரத்துவது இன்றியமையாதது ஆயிற்று.
எனவே, அபராஜிதவர்மன் பாண்டியனோடு
போர்புரிவதற்குப் பெரும் படையோடு புறப்
பட்டான். அக்காலத்தில் அவனுக்கு நண்பனா
யிருந்த மேலைக் கங்க அரசன் முதல் பிருதுவிபதியும் அவன் நண்பனாகிய இராட்
டிரக்கூட வேந்தன் இரண்டாம் கிருட்டிண
தேவனும் அபராஜித வர்மனுக்கு உதவிபுரியப்
படைகளுடன் வந்தனர். எனவே, முதல் ஆதித்த சோழன், அபராஜித வர்மன், முதல்
பிருதுவிபதி, இரண்டாம் கிருட்டிண தேவன்
ஆகிய நான்கு அரசர்களும் இரண்டாம் வர
குணபாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்து
தனர்.

           கும்பகோணத்திற்கு வடமேற்கே 5 மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரை
யிலுள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் பெரும் போர் நடைபெற்றது.(Udayendiram
Plates of Prithivipathi, South Indian Inscrip--
tions Vol. II No.76).  அப்போரில் வரகுண
பாண்டியன் தோல்வியெய்திச் சோழ நாட்டை
விட்டோடி விட்டான். வெற்றி பெற்ற அபராஜித
வர்மன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ
நாட்டுப் பகுதியை முதல் ஆதித்த சோழனுக்கு
அளித்தன ன். ஆகவே, அப்போரின் பயனாகச்
சோழ நாடு முழுவதும் சோழ மன்ன னாகிய
முதல் ஆதித்த சோழனின் ஆளுகைக்குள்
வந்து விட்டது எனலாம்.அப்போர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட மன்னர்களில் முதல்
பிருதுவிபதி என்ற கங்க அரசன் போர்க்
களத்தில் உயிர் துறந்தான்.

  முதல் ஆதித்த சோழன் இளம் பருவத்தின
னாயிருந்தும் பேராற்றலோடும் பெருவீரத்
தோடும் போர் புரிந்தமை, இரண்டாம் கிருட்
டிண தேவன் உள்ளத்தைப் பெரிதும் பிடித்து
விட்டது. திருப்புறம்பயப் பெரும் போரில் அவன் புரிந்த வீரச் செயல்களாலும் அடைந்த
வெற்றியாலும் எதிர் காலத்தில்  சோழ இராச்
சியத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்கு
மாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்
வரசிளங்குமரன் என்பது எல்லோருக்கும்
நன்கு புலப்பட்டது. ஆகவே,, இரண்டாம் கிருட்
டிண தேவன் அவன்பால் பெரிதும்
ஈடுபட்டுத் தன் அருமை மகள் இளங்கோப்
பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து கொடுக்க விரும்பினான்....

No comments:

Post a Comment