Friday, June 10, 2016

ஆதித்த சோழ ராஜா

முன் பக்கத் தொடர்ச்சி..
வரலாற்றுப் பேரறிஞர் அமர ர் தி.வை.
சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்
எழுதியுள்ளதாவது(தொடர்ச்சி)

         "திருப்புறம்பயப் பெரும் போரில்
(ஆதித்த சோழன்) புரிந்த வீரச்செயல்
களாலும் அடைந்த வெற்றியாலும்
எதிர்காலத்தில் சோழ இராச்சி யத்தைப் பேர ரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங்குமரன்
என்பது எல்லோருக்கும் நன்கு புலப்
பட்டது. ஆகவே, இரண்டாம் கிருட்டிண
தேவன் அவன் பால் பெரிதும் ஈடுபட்டு
தன் அருமை மகள் இளங்கோப் பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து
கொடுக்க விரும்பினான்.  அத்திருண
மும் விரைவில் நிறைவேறியது.முதல்
ஆதித்த சோழனும் இளங்கோப் பிச்சியும் சோழ நாட்டின் தலைநக ராகிய தஞ்சை மாநகரில்இனிது
வாழ்ந்து வருவாராயினர். இளங்கோப்பிச்சியை தன் பட்டத்து் அரசியாக்கிக் கொண்டான்.இதுவே,
பம்பாய் மாகாணத்தின் தென் பகுதி
யாகிய குந்தள நாட்டில் கி.பி. ஒன்
பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஆட்சி புரிந்த இராட்டிரகூடருக்கும்
சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில்
அரசாண்ட சோழருக்கும் முதலில்
ஏற்பட்ட திருமணத் தொடர்பு ஆகும்."
இவ்வாறு எழுதியுள்ளார்.

ஆதித்த சோழன் தன் தந்தை விஜயா
லயச் சோழனைப் போலவே, கரிகாலச்
சோழன் இமயத்தில் புலிக் கொடியை
பறக்கவிட்டதைப் போன்ற மிகப் பெரிய சோழப் பேர ரசை, நன் வாழ்
நாட்களுக்குள் ஸ்தாபித்துவிட வேண்
டும் என்ற தணியாத உள்ள வேட்கையை கொண்டிருந்தான். சதா
சர்வகாலமும் அதனைச் செயல்படுத்
தும் வேட்கையைத் தூண்டிக் கொண்ட
டிருந்தான். தன் போர்த் தளபதி களுகளுடன் சேர்ந்து அதற்கான
போர்த் திட்டம் தீட்டினான்.  இதனைப்
பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
என்ற தன் நூலில் பக்கம் 250, வரிகள் 19--30ல் எழுதியுள்ளதாவது:-

"சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவரின் ஆட்சியின் கீழ் இருந்து
வந்த்தைக் கண்டு ஆதித்தன் மனம்
பொறாதவனாய் அதை மீட்கும் முயற்
சிகளில் ஈடுபட்டான். பல்லவருடன்
போர் தொடுத்தான். போரில் மாபெரும் வெற்றியுங் கண்டான்.

உயர்ந்த்தொரு யானையின்மேல்
அமர்ந்து போர் செய்து கொண்டிருந்த
அபராசித பல்லவனை ஆதித்தன்(புலி
பாய்வது போல் ஒரே பாய்ச்சலில்
யானையின்மீது பாய்ந்து தாவி ஏறி)
வாளால் ஒரே வீச்சில் (அபராஜி தனைக்) கொன்றதாக க் கன்னியா
குமரிக் கல்வெட்டு ஒன்று கூறு கின்றது. பல்லவ அரசு கவிழ்ந்த து.
பல்லவரின் ஆட்சிக்குட்பட்டிருந்த
தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆதித்தன் சோழ நாட்டுடன்
இணைத்துக் கொண்டான்.சோழ நாட்
டெல்லை விரிவடைந்து வடக்கே
இராட்டிரக் கூடரின் ஆட்சி வரம்பை
எட்டி நன்றது(கி.பி.890)
வீர ராஜேந்திரனின் கல்வெட்டும்
இவ் வெற்றியைக் குறிப்பிடுகின்றது.
மேலும், அன்பில் செப்பேட்டில் இவனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்
கின்றன. சயாத்திரி மலைகளிலிருந்து
கீழைக் கடற்கரை வரையில் காவிரி
யின் இரு மருங்கிலும் சிவ பெருமானுக்காக கற்றளிகள்(64 சிவா
லயங்கள்) எடுப்பித்தான்.

கொங்கு நாட்டில் ஆதித்தனின் கல்
வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு கொங்கு தேசத்
தையும் அவன் வென்று தன் ஆட்சி
யின்கீழ் இணைத்துக் கொண்டான்..."

இவ்வாறு டாக்டர் கே.கே.பிள்ளை
அவர்கள் தன் மேற்கண்ட நாளில்
பக்கம் 251ல் வரிகள் 1--4ல் எழுதி
யுள்ளார்.

இப்புகழ்படைத்த  ஆதித்த சோழ
ராஜாவின் கற்சிலையே தற்போது
ஊத்துக்காடு,ஆவூரை அடுத்துள்ள
ஆதிச்ச மங்கலம் அய்யனார் கோயிலோடு, பின்பக்க சன்னதியில்
"ஆதித்த சோழ ராஜா" என்ற தனி சன்
னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு
வருகின்றது.  இதனை குடந்தை பேருந்திலிருந்து கோவிந்தகுடியில்
இறங்கி கிழக்கே சுமார் 3 கி.மீ.
தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

இந்த ஊர் 1000 ஆண்டுகளுக்கு
முன்பிலிருந்தே, ஆதித்த சோழ மங்
கலம் என அச்சோழப் பேர ரசரின்
பெயரிலேயே வழங்கப்பட்டு, பின்
மரூவி, தற்போது ஆதிச்ச மங்கலம்
என பெயர் சுருங்கி வழங்கி வரு
கின்றது. இது கள்ளர்களுக்கு பெருமை தரும் வரலாறு ஆகும்.

No comments:

Post a Comment