Thursday, July 21, 2016

மழவரையர் பழுவேட்டரையர் மண உறவு

வரலாற்றுத் தொடர்--4இன் தொடர்ச்சி
  கள்ளன் ஆதித்தபிடாரியின் மாமியாரை(முதலாம் பராந்தகச் சோழ
னின்(கி.பி.907--953) மனைவி நம்பி
ராட்டியார் அருள்மொழி நங்கையை)
பெற்ற அன்னை..செம்பியன் மாதேவி
யின் அத்தை ஆவார். செம்பியன்
மாதேவியின் தந்தை பெயர்.. மழவரையர் பராந்தக வர்மர் என
திருக் கற்குடி கல்வெட்டு குறிப்பிடும்
கின்றது. இம்மழவரையருக்கு மழ
பெருமானடிகள் என்றொரு ஆன்மீகப்
பெருமானாகிய அரசர் என்ற பொருள்
தரும் பெயரும் உண்டு. விருத்தாசலம்
விருத்தகிரீசுவர ர் கோயில் மண்டபச்
சுவரிலுள்ள கல்வெட்டு ......
""பராந்தகத் தேவரான பெரிய சோழனார்
மகனார் கண்டராதித்த தேவர் தேவியார்
மழபெருமானடிகள் மகளார் உத்தம
சோழர் தங்களாச்சி செம்பியன் மகாதேவி ""என்று..செம்பியன் மாதேவி
யின் தந்தை, மாமனார், கணவர், மகன்
என அனைத்து உறவினர்களையும் இக்
கல்வெட்டு(விருத்தாசலம் கல்வெட்டு)
காட்டி நிற்பது..வரலாற்றில் ஒரு மைல்
கல் ஆகும். இக்கல்வெட்டுக்காட்டும்
செம்பியன் மாதேவியின் உறவினர்கள்
வருமாறு:--
(செம்பியன் மாதேவியின்..)
தந்தை.  ....  மழ பெருமானடிகள்
மாமனார்..   பராந்தகத் தேவர் ஆன
                       பெரிய சோழனார்(திருச்
                        சிற்றம்பலத்தைப் பொன்
                        னம்பலமாக்கிய மதுரை
                        யும் ஈழமும் கொண்ட
                        கோப்பரகேசரி வர்மன்
                         என்ற முதலாம் பராந்தகச்
                         சோழன்(கி.பி.907--953)
கணவர்...       கண்டராதித்த தேவர்(கிபி.
                          950--957)
மகன்...            உத்தம சோழ தேவர்(கிபி.
                           970--985)
        மேலும், கீழப் பழுவூர் கல்வெட்டு
எண்.237, மழவரையர் பராந்தக வர்மருக்கு சென்னி நம்பியார் என்ற
பெயரையும் மழ பெருமானடிகள் என்ற
பெயரையும் உரியதாக்கி நிற்கின்றது.
       மேற்கண்ட கீழப்பழுவூர் கல்வெட்டு
எண்.237இல்,  மழவரையர் பராந்தக
வர்மர் @ மழபெருமானடிகள் @ சென்னி
நம்பியார்...தன்னை, குமரன் மறவனின்
மகன் மறவன் கண்டன் பழுவேட்டரை யருக்கு  தான் தாய் மாமன் எனக்
குறிப்பிடுகின்றார்.  இதன் மூலம் குமரன் மறவனின் மனைவி, தன்னுடைய உடன் பிறந்த சகோதரி எனக் குறிப்பிடுகின்றார். இந்த உடன்
பிறந்த சகோதரியின் வயிற்றில் பிறந்த
மறவன் கண்டன் பழுவேட்டரையர் தனக்கு மருமகன்(மருமான் )
உறவின ன் எனக் குறிப்பிட்டுள்ளது
சரியானதன்றோ?
       மேலும், இரு பழுவேட்டர்ரையர் களும் செம்பியன் மாதேவியை தன்
னுடைய தாய் மாமன் மகள் என இக்
கல்வெட்டில் குறிப்பிடுகின்றனர். அதே
போன்று, செம்பியன் மாதேவியும்
பழுவேட்டரையர்களை தன் அத்தை
(தன் தந்தையின் சகோதிரி) பெற்ற
பிள்ளைகள் எனக் குறிப்பிடுகின்றார்
இதையே கல்வெட்டை ஆராய்ந்த கல்
வெட்டு ஆராய்ச்சியாளர் இவ்வுறவு
முறையை ஆங்கிலத்தில்..ஒருவருக்
கொருவர் COUSIN எனக் குறிப்பிட்டுள்
ளார்.                       தொடரும்.

பள்ளராகிய களமர் என்ற உழவர் அடிமையர் கூட்டம்

களமர் கதிர்மணி காலேகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் கொளன் மலிந்து.." என
கி்பி்8ஆம்நூற்றாண்டிலேயே
புறப்பொருள் வெண்பாமாலை
பாடல் 59 குறிப்பிடுகின றது. இதற்கு பொருள் வருமாறு:-
மறவர்கள் பனடையெடுத்துச்
சென்று பகைவன் வளமனை
பாழாக வெற்றிக்கொண்டு அடி
பணியச்செய்து அவனுடைய
பொன்னையும்,மணிகளையும்,
முத்துக்களையும் கவர்ந்து
வந்தபோது, களமர் என்ற உழவராகிய பள்ளர் அடிமைக்
கூட்டத்தையும் கைப்பற்றி
வந்தனர். முக்கூடற்பள்ளு
களமர் என்ற பள்ளராகிய
அடிமையின் காலில் கட்டையைப்
பூட்டி அடிமைத் தளையைச்
செய்ய, மூத்த பள்ளி ஆண்டையை வேண்டி காலில்
பூட்டிய அடிமைத் தளையை நீக்கி
னாள் எனக் குறிப்பிடுகிறது.இந்த அடிமைகளா நாடாண்
டார்கள்? கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவருக்கு
மதி எங்கே போயிற்று?

பழுவேட்டரையர்

பழுவேட்டரையர்
பழுவூரை ஆண்ட மன்னர்கள்
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை
எண் 1
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 10
பழுவேட்டரையர்  - குமரன் கண்டன்
செய்தி - நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது
எண் 2
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு -  12
பழுவேட்டரையர் -  குமரன் கண்டன்
செய்தி -   'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்
எண் 3
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு -  19
பழுவேட்டரையர் -  குமரன் மறவன்
செய்தி  -  இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்
எண் 4
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு -  22
பழுவேட்டரையர் -  குமரன் மறவன்
செய்தி -  இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்
எண் 5
கல்வெட்டு இருக்குமிடம் - லால்குடி
கோயில் பெயர் -  சப்தரிஷீசுவரர் கோயில்
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு -  5
பழுவேட்டரையர் -  குமரன் மறவன்
செய்தி -  'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது
எண் 6
கல்வெட்டு இருக்குமிடம் -  திருப்பழனம்
கோயில் பெயர் -  மகாதேவர் கோயில்
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு -  6
பழுவேட்டரையர் -  குமரன் மறவன்
செய்தி -  குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது
எண் 7
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர்
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு -  12
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன்
செய்தி -  வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி
எண் 8
கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு -  14
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன்
செய்தி -  இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது
எண் 9
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  சுந்தரசோழர்
ஆட்சியாண்டு -  5
பழுவேட்டரையர் --மறவன் கண்டன்
செய்தி -  இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது
எண் 10
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர்
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் -  உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு -  9
பழுவேட்டரையர் -  மறவன் கண்டன்
செய்தி -  இவரது மறைவைத் தெரிவிக்கிறது
எண் 11
கல்வெட்டு இருக்குமிடம் -  உடையார்குடி
கோயில் பெயர் -  அனந்தீசுவரர் கோயில்
சோழமன்னர் -  உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு -  12
பழுவேட்டரையர் -  கண்டன் சத்ருபயங்கரன்
செய்தி -  இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்
எண் 12
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர்
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் -  உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு -  13
பழுவேட்டரையர் -  கண்டன் சுந்தரசோழன்
செய்தி -  இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக    ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்
எண் 13
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு -  15
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன்
செய்தி -  நிவந்தம் அளித்தது
எண் 14
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு -  3
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன்
செய்தி -  கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது
எண் 15
கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர்
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு -  15
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன்
செய்தி -  இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே
எண் 16
கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர்
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் -  முதலாம் இராஜேந்திரர்
ஆட்சியாண்டு -  8
பழுவேட்டரையர் -  யாருமில்லை
செய்தி -  பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது
சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள்
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.
அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்.

காலிங்கராயர் பட்டம்

உங்கள் முன்னோரான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன், பரணி புகழ் கருணாகரத்
தொண்டைமானுடன் படைத்தளபதியாக படையெடுத்துச்சென்று, கி்பி்1112-ல் 
  வட கலிங்க மன்ன ன் அனந்தவர்ம சோழ
கங்கனை கலிங்கத்துப் போரில் வென்று
வெற்றிவாகைச் சூடி திறை கொண்டு
வந்த்துடன், அனந்த வர்ம சோழ கங்கனையும்
சிறைபிடித்து வந்த தால், மனம் மகிழ்ந்த முத
லாம் குலோத்துங்க சோழன் கலிங்கரையர்
என்ற பட்டமளித்துப் பாராட்டினார். கலிங்
ரையர் பட்டமே, காலிங்கராயர் என மரூவி
வந்துள்ளது. மேலும், பெரும் வீரம் படைத்த
படைத்தளபதியான அரும்பாக் கிழான்,
மலைநாடு(சேர நாடு), பாண்டிய நாடு வென்றுவந்த தற்காகவும்,கலிங்கரையர்
பட்டத்தைச் சூட்டி, முதலாம் குலோத்துங்க
சோழன் பெரிதும் பாராட்டினார். அவ்வீரத்
தளபதியின் கால்வழி கள்ளர்களுக்கு
வாழையடி வாழையாக இப்பட்டம் மரபுரிமை
யால் வழங்கிவருகின்றது.(ஆதாரம்: பிற
காலச் சோழர் வரலாறு பக்கம் 237)

துறை ஆண்டார் பட்டம்

இடைதுறை நாடு:-
கிருஷ்ணா நதிக்கும் துங்க
பத்திரை நதிக்கும் இடை
யிலுள்ள நாடு. இதை இக்
காலத்தில், மும்பை(பம்பாய்) மாகாணத்திலுள்ள "ரெய்ச்
சூர்" மாவட்டம் எனலாம்.
கி்பி.1023ஆம் ஆண்டிற்கு
முன்னர் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழன் வட
நாடுகளின் மீது படை எடுத்
துச் சென்று வட நாடுகளை
வென்றுவந்தார்.இடைதுறை நாடு,சக்கரக் கோட்டம்....தண்டபுத்தி,தக்கணலாடம்...போன்ற நாடுகளை வென்று வந்தார். அவருடன் படையெடுத்துச் சென்று,
அவருக்கு வெற்றிவாகைச்
சூடித்தந்த கள்ளர்குல படைத் தளபதிகளைப்
பாராட்டி, தான் வென்ற நாடுகளிலுக்கெல்லாம்
அரசராக முடிசூட்டி அந்நாடு
களை ஆளும் அரசர் பொறுப்பையும் கொடுத்து
தளபதிகளை உற்சாகப்கடுத்துவது இராஜராஜ சோழனின் வழக்கமாக க் கொண்டி
ருந்தார். தந்தை வழியை
அடிபிறழாது பின்பற்றிய
மும்முடச் சோழகன் பெற்ற
களிறு ஆகிய இராஜேத்திர
சோழ தேவரும் இடைதுறை
நாட்டை வெற்றி வாகைச்
சூடித்தந்த தன் படைத் தளபதிக்கு துறைஆண்டார்
பட்டமளித்துப்பாராட்டி, அவர் வென்ற நாட்டை ஆளும் பொறுப்பையும்
அளித்து அந்நாட்டின் அரசராகவும் முடிசூட்டி அவர் தளபதிகளை பெருமைபடுத்தினார். அப்
பெருமைகளைப் பெற்றவர்
களே உங கள் முன்னோ்.
அப்பெருமைகளின் வீரவர
லாற்று அடையாளமே நீங்கள் பெற்றிருக்கும் பட்டப் பெயர கள். எனவே,
தவறாமல் உங்கள் பட்டப்
பெயர்களை சூட்டிக் கொள்ளுங்கள். அவ்வாறு
சூட்டிக் கொள்வதால்,இவ்
கள் முன்னோரை நினைவு.கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அப்பட்டங்களை அளித்து
உங்களுக்கு குலப்பெருமை
அளித்த அச் சோழப்பேர்ரசர்களையும்
நினைவு கூர்ந்து உங்கள்.நன்றியை தெரிவிப்பது ஆகும். மேலும்,உங கள் கையெழுத்து போடும்போது உங்கள் பட்டப் பெயரையும் சேர்த்து
எழுதி கையொப்பமிடும்படி
வேண்டுகிறேன். அன்புடன்
ஊத்துக்காடு இராம.சம்பந்தமூர்த்தி மழவராயர்.

முதலாம் குலோத்துங்க சோழன் சூட்டிய பட்டம் வாண்டையார்

வட கலிங்க மன்னன் அனந்த வர்மன் சோழகங்கனை, கி.பி.1112-ல் கலிங்கத்துப்
போரில் வென்று திறை கொண்டு வந்த
முதலமைச்சரும் தலைமைப் படைத்தளபதியு
மான கருணாகரத் தொண்டைமானுக்கு
வண்டைநாட்டு அரசனாக முடிசூட்டி, வண்டையர்கோன், வண்டைநகராதிபதி, வண்டைநகர ரசன், வண்டையர்க்கரசு, வண்டைமன் ..ஆகிய பட்டங்பளுடன்
வேள், தொண்டைமான் பட்டங்களையும்
அளித்துப் பாராட்டிய முதற் குலோத்துங்க
சோழன் கருணாகரத் தொண்டைமானுக்கு
தனி சிற்றரசராக வண்டை நாட்டை ஆளும்
அதிகாரமும் அளித்துப் பாராட்டித் தான் பெரும் மனமகிழ்வு கொண்டார்.
வண்டையர்கோன் என்ற பட்டமே, வண்டை
யர் என்றும் பின் வாண்டையார் என்றும்
மரூவி, கருணாகரத் தொண்டைமானின்
கால்வழிக்கள்ளர்களுக்கு மரபுரிமையால்
இன்றும் வழங்கி வருகின்றது. வேள் பட்டம்
பெற்ற கருணாகரத் தொண்டைமான்
கள்ளர் என்பதை, அறந்தாங்கி தொண்டைமான் அரசரான விசைய அருணா
சல வணங்காமுடித் தொண்டைமானார்,
தன்னுடைய பண்ணை வயல் செப்பேடு
தேதி  27--10--1759-ல் ,
கருணாகரத் தொண்டைமான் தன்னுடைய
முன்னோராக, இச்செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார்.(ஆதாரம்: தொண்டைமான்
செப்பேடுகள் பக்கம் 209--214 & பிற்காலச்
சோழர் வரலாறு பக்கம் 236).