Thursday, July 21, 2016

மழவரையர் பழுவேட்டரையர் மண உறவு

வரலாற்றுத் தொடர்--4இன் தொடர்ச்சி
  கள்ளன் ஆதித்தபிடாரியின் மாமியாரை(முதலாம் பராந்தகச் சோழ
னின்(கி.பி.907--953) மனைவி நம்பி
ராட்டியார் அருள்மொழி நங்கையை)
பெற்ற அன்னை..செம்பியன் மாதேவி
யின் அத்தை ஆவார். செம்பியன்
மாதேவியின் தந்தை பெயர்.. மழவரையர் பராந்தக வர்மர் என
திருக் கற்குடி கல்வெட்டு குறிப்பிடும்
கின்றது. இம்மழவரையருக்கு மழ
பெருமானடிகள் என்றொரு ஆன்மீகப்
பெருமானாகிய அரசர் என்ற பொருள்
தரும் பெயரும் உண்டு. விருத்தாசலம்
விருத்தகிரீசுவர ர் கோயில் மண்டபச்
சுவரிலுள்ள கல்வெட்டு ......
""பராந்தகத் தேவரான பெரிய சோழனார்
மகனார் கண்டராதித்த தேவர் தேவியார்
மழபெருமானடிகள் மகளார் உத்தம
சோழர் தங்களாச்சி செம்பியன் மகாதேவி ""என்று..செம்பியன் மாதேவி
யின் தந்தை, மாமனார், கணவர், மகன்
என அனைத்து உறவினர்களையும் இக்
கல்வெட்டு(விருத்தாசலம் கல்வெட்டு)
காட்டி நிற்பது..வரலாற்றில் ஒரு மைல்
கல் ஆகும். இக்கல்வெட்டுக்காட்டும்
செம்பியன் மாதேவியின் உறவினர்கள்
வருமாறு:--
(செம்பியன் மாதேவியின்..)
தந்தை.  ....  மழ பெருமானடிகள்
மாமனார்..   பராந்தகத் தேவர் ஆன
                       பெரிய சோழனார்(திருச்
                        சிற்றம்பலத்தைப் பொன்
                        னம்பலமாக்கிய மதுரை
                        யும் ஈழமும் கொண்ட
                        கோப்பரகேசரி வர்மன்
                         என்ற முதலாம் பராந்தகச்
                         சோழன்(கி.பி.907--953)
கணவர்...       கண்டராதித்த தேவர்(கிபி.
                          950--957)
மகன்...            உத்தம சோழ தேவர்(கிபி.
                           970--985)
        மேலும், கீழப் பழுவூர் கல்வெட்டு
எண்.237, மழவரையர் பராந்தக வர்மருக்கு சென்னி நம்பியார் என்ற
பெயரையும் மழ பெருமானடிகள் என்ற
பெயரையும் உரியதாக்கி நிற்கின்றது.
       மேற்கண்ட கீழப்பழுவூர் கல்வெட்டு
எண்.237இல்,  மழவரையர் பராந்தக
வர்மர் @ மழபெருமானடிகள் @ சென்னி
நம்பியார்...தன்னை, குமரன் மறவனின்
மகன் மறவன் கண்டன் பழுவேட்டரை யருக்கு  தான் தாய் மாமன் எனக்
குறிப்பிடுகின்றார்.  இதன் மூலம் குமரன் மறவனின் மனைவி, தன்னுடைய உடன் பிறந்த சகோதரி எனக் குறிப்பிடுகின்றார். இந்த உடன்
பிறந்த சகோதரியின் வயிற்றில் பிறந்த
மறவன் கண்டன் பழுவேட்டரையர் தனக்கு மருமகன்(மருமான் )
உறவின ன் எனக் குறிப்பிட்டுள்ளது
சரியானதன்றோ?
       மேலும், இரு பழுவேட்டர்ரையர் களும் செம்பியன் மாதேவியை தன்
னுடைய தாய் மாமன் மகள் என இக்
கல்வெட்டில் குறிப்பிடுகின்றனர். அதே
போன்று, செம்பியன் மாதேவியும்
பழுவேட்டரையர்களை தன் அத்தை
(தன் தந்தையின் சகோதிரி) பெற்ற
பிள்ளைகள் எனக் குறிப்பிடுகின்றார்
இதையே கல்வெட்டை ஆராய்ந்த கல்
வெட்டு ஆராய்ச்சியாளர் இவ்வுறவு
முறையை ஆங்கிலத்தில்..ஒருவருக்
கொருவர் COUSIN எனக் குறிப்பிட்டுள்
ளார்.                       தொடரும்.

No comments:

Post a Comment